தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மின்வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் முறையான வருமானம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனை ஜூலை 30 வரை நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் பதில் அளித்த தமிழ்நாடு மின்வாரியம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பூரி ஜெகநாதர் தேரோட்டம் 2020 – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது..!
மேலும் பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசத்தை நீட்டிக்க முடியாது என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் கால அவகாசத்தை ஜூலை 15க்கு மேல் நீட்டிக்க முடியாது என மின்வாரியம் தெரிவித்து உள்ளது. பிற மாவட்டங்களில் 75% பேர் மின் கட்டணம் செலுத்தி விட்டதால் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டு உள்ளது.