அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக இயக்கப்படும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது.
அமெரிக்கா போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை..!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. ஆனால் இந்தியாவின் விதிமுறைப்படி அமெரிக்கா விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை..!
இதனால், அமெரிக்கா அரசு ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதிக்கபடுகிறது. இந்த தடை 30 நாட்களுக்கு அமலில் இருக்கும். விமானங்களை இயக்கப்படுவதற்கு முன்னர் ஏர் இந்திய நிறுவனம் அனுமதி பெற வேண்டும். இந்தியாவில் அமெரிக்கா விமானங்களுக்கு காட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகே தடை நீக்கபடும் என கூறப்பட்டுள்ளது.