தமிழகத்தில் நிவர் புயலின் காரணமாக அதிகம் பாதிப்புள்ளாகும் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை நடைபெறவிருந்த சி.ஏ தேர்வுகளை ஒத்திவைத்தது, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம். இந்த தேர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் நிவர் என்ற புயல் புதியதாக சென்னையிலிருந்து 630 கி .மீ தொலைவில் இருந்து மையம் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட இருக்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவலும் வெளியானது. இந்நிலையில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இன்று நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகளை இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் ஒத்திவைத்தது.
பட்டய கணக்காளர் நிறுவனம்
9 மாவட்டங்களான சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுச்சேரி, புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆகையால் இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த சி.ஏ தேர்வு அடுத்த மாதம் டிசம்பரில் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தியை மாணவர்களுக்கு குறுந்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.