நாளுக்கு நாள் மருத்துவமனையில் அதிகரித்து வரும் சிசேரியன் டெலிவரியால், தாய் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிசேரியன் டெலிவரி :
முந்தைய காலத்தில், பெண்களுக்கு அதிகமாக சுகப்பிரசவம் நடந்தது. அந்த பிரசவ சமயத்தில் மரணத்தை ஒரு முறை தொட்டு பார்ப்பது போல பெண்களுக்கு வலி இருக்கும். ஏனென்றால் சுகப்பிரசவத்தில்,பெண்ணின் இடுப்பு எலும்புகள் வளைந்து பெண் உறுப்பு வழியாக குழந்தை பிறக்கும். இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் சுகப்பிரசவம் வெகுவாகக் குறைந்து, சிசேரியன் அதிகரித்து விட்டது. என்ன குழந்தை பிறந்திருக்கு என்ற கேள்வி போய், நார்மல் டெலிவரியா? சிசேரியனா என்ற கேள்விதான் இப்போது அதிகம் கேட்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த அளவிற்கு மருத்துவமனைகளில் சிசேரியன் முறை மூலம் தான் குழந்தை பெற்று கொள்கின்றனர். நார்மல் டெலிவரியில் ஒரு நாள் மட்டும்தான் வலி, ஆனால் சிசேரியன் பண்ணும் போது முதுகெலும்பில் போடப்படும் அந்த ஊசியின் வலி வாழ்நாள் முழுதும் இருக்கும். சிசேரியனுக்கு பிறகு பெண்கள் உடல் பலவீனம், உடல் பருமன், சோர்வு, இளமையில் முதுமை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது சிசேரியன் முறை மூலம் பிறக்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் உடல் பருமன், சுவாசக்கோளாறு, இதய நோய், அஜீரண கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக ஒரு முக்கிய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் நார்மல் டெலிவரி சமயத்தில் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சில அம்சங்கள் சிசேரியன் முறை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போவதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.