Saturday, April 27, 2024

உயிருடன் இருந்த அண்ணனை சவப்பெட்டிக்குள் வைத்த தம்பி – சாகும் வரை காத்திருந்த அவலம்!!

Must Read

சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை கைகளை கட்டி சவப்பெட்டிக்குள் வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. இதனை அவரது சொந்த தம்பி செய்துள்ளார் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்துவிடுவார் என்று கூறினார்:

சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பழைய ஹௌசிங் போர்டு பகுதியை சேந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கு 78 வயது ஆகிறது. இவர் தனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். கடந்த திங்கள் கிழமை அன்று பாலசுப்ரமணியத்தின் சகோதரர் சரவணன் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாக கூறி சவப்பெட்டியை வரவழைத்துள்ளார்.

மகிழ்ச்சி திளைப்பில் இல்லத்தரசிகள் – தாராளமாக குறைந்த தங்கத்தின் விலை!!

சவப்பெட்டியை எடுக்க வந்தவர்கள் முதியவர் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர். அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஆனால், அவரது கண்கள் திறந்து இருந்துள்ளது. இது பற்றி சரவணனிடம் விசாரித்துள்ளனர். அதற்கு சரவணன் அவர் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போலீசார் விசாரணை:

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து பாலசுப்ரமணியத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

காவல் துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடப்பிறந்த சகோதரன் இறந்து விடுவார் என்று கூறி இப்படி செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -