பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கொரோனா உறுதி – ரசிகர்கள் ஷாக்!!

0
தன் ஆண் குழந்தையை இழந்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ - துயரத்தில் மூழ்கிய ரசிகர் பட்டாளம்!!

கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரொனால்டோவிற்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும், நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று:

35 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் ஸ்வீடனுக்கு எதிரான யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரொனால்டோவிற்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக போர்ச்சுகல் அணியின் மற்ற வீரர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவில் வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்த யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக்கில் போர்ச்சுகலும், பிரான்சும் மோதிய ஆட்டத்தில் ரொனால்டோ ஆக்ரோஷமாக காணப்பட்ட நிலையில் 0-0 என்ற நிலையில் போட்டி சமனில் முடிந்தது. லீக் ஏ பிரிவில் போர்ச்சுகல் அணி 3வது இடத்தில் உள்ளது. இப்போட்டிக்கு பின்னர் சக வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்திருந்த ரொனால்டோவிற்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளதால் வீரர்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது – போலீசார் அதிரடி!!

இதனால் அடுத்த போட்டி நடைபெறுவதற்கு முன் அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ரொனால்டோவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here