இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடிச்சுடுச்சா?? அப்போ கண்டிப்பா இந்த பிரட் ஆப்பத்தை ட்ரை பண்ணுங்க!!

0

காலை டிபனுக்கு எப்பொழுதுமே இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்து போயிருப்போம். குழந்தைகளும் இதனை சாப்பிட பிடிக்காமல் காலை உணவை தவிர்பதுண்டு. ஆனால் தற்போது காலை உணவை எப்படி சுவையாக சமைப்பது அதுவும் பிரட்டை வைத்து எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பிரட் – 4

மைதா மாவு – 3 தேக்கரண்டி

ரவை – 3 தேக்கரண்டி

தயிர் – 1 கப்

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

குடைமிளகாய் – 1

தக்காளி – 1

இஞ்சி – சிறிது

செய்முறை

முதலில் பிரெட்டில் உள்ள ஓரங்களை நறுக்கி எடுத்து கொள்ளவும். அதனுடன் ரவை, மைதா மாவு, தயிர், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

இப்பொழுது தனியாக ஒரு பவுலில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய குடைமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்து அந்த மாவையும் ஊற்றி நன்கு கலந்துகொள்ளவும். இப்பொழுது தோசைக்கல்லில் ஊற்றி நன்கு சிவக்கும்படி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான பிரெட் ஆப்பம் தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here