கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலகங்கா, பசவேஸ்வரா நகரில் உள்ள 48 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அந்த இமெயிலில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வெடிகுண்டு பொருட்கள் உள்ளது. இனிமேல் நீங்க புத்த மதம் மற்றும் பிற மத உருவ வழிபாடுகளை கைவிட வேண்டும். அதோடு அல்லாவின் வழிபாட்டை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும். நீங்கள் இஸ்லாமுக்கு மாற வேண்டும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இல்லையெனில் நீங்கள் இறக்க நேரிடும் என கூறப்பட்டது. இந்த இமெயிலை பார்த்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர். இதனால் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் வெளியேற பெற்றோர்களும் அங்கு உடனே வந்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின் அந்த இமெயில் பற்றி போலீஸார்கள் விசாரித்ததில் அது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.