ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதிகள் பெரும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது, அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் உள்ள மக்களுக்கு ஸ்வஸ்த்ய சதி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மேற்கொள்ளும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சில அரசு மருத்துவர்கள் கமிஷன் பெற்று நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அம்மாநில சுகாதார சேவை டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனாஸ் கும்தா முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.அதாவது மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மேற்கு வங்க மருத்துவ கவுன்சிலில் (WBMC) 3 மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் நோயாளியை எந்த மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார் என்பதை எளிதாக தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.