பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆன நடிகை ஓவியா தனது instagram பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகை ஓவியா:
தமிழ்த்துறையில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை ஓவியா. அதன் பின்னர் கலகலப்பு, முத்துக்கு முத்தாக, மதயானை கூட்டம் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, தன்னுடைய எதார்த்தமான பேச்சுகளாக ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த சோவில் அற்புதமாக விளையாடி வந்த ஓவியா, சக போட்டியாளரான மாடல் ஆரவ்வை காதலித்தார். ஆனால் அந்தக் காதலை ஏற்க மறுத்தார் ஆரவ். இருப்பினும் ஓவியாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு மருத்து, முத்தம் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் பின்னர் சோவில் இருந்து வெளியே வந்த ஓவியா சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தத்தளித்து வந்தார்.
தமிழக மக்களே உஷார்.,நாளை (19.01.2023) இந்தந்த பகுதிகளில் மின்தடை., முழு விவரங்கள் உள்ளே!!
தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி இருக்கும் ஓவியா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது instagram பக்கத்தில் லைவ் வந்த ஓவியா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதாவது லைவில் ரசிகர்களிடம் பேச வந்த ஓவியா ஒரு கையில் பிஸ்கட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஒருவர் பாய்ந்து அவரின் கன்னத்தில் முத்தமிடுகிறார்.
மேலும் ஓவியாவை இறுக்கமாக கட்டி பிடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஓவியா. மேலும் திரும்பவும் ஓவியா காதலில் விழுந்து விட்டாரா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஒரு சிலர் அவர் காதலனா இல்ல நண்பனா என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
View this post on Instagram