பிக் பாஸில் ரீஎன்ட்ரி கொடுத்த அர்ச்சனா, நிஷா – களைகட்டிய பிக் பாஸ் ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று ஷிவானி வேறு வெளியேற்றப்பட்டதை அடுத்து தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் தற்போது அர்ச்சனா, நிஷா மற்றும் ரமேஷ் போன்றோர் வீட்டிற்குள் வருகின்றனர்.

பிக் பாஸ்

இத்தனை நாட்கள் நடந்த Ticket To Finale போட்டியில் எப்படியோ அடித்து பிடித்து சோம் ஜெயித்து விட்டார். இத்தனை வருடங்கள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த டாஸ்க் சற்று வித்தியாசமாகவே இருந்தது. ஏனெனில் பிக் பாஸ் சீசன்-1 மற்றும்2 இல் மிகவும் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இரவு பகல் பாராது டாஸ்கை செய்து முடித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது பிஸிக்கல் டாஸ்கை விட மெண்டல் டாஸ்க் தான் அதிகம் கொடுக்கப்பட்டது. மேலும் அனைவரின் மதிப்பெண்களை வைத்து பார்க்கும்போது ஒரு சில மதிப்பெண்களே கம்மியாக இருந்தனர். இத்தனை நாட்கள் ஷிவானி விளையாடவே இல்லை என்று பலரும் திட்டி வந்தனர்.

ஆனாலும் அவருக்கு ஒட்டு போட தான் செய்தனர். ஆனால் இந்த வாரம் முழுக்க தனது முழு திறமையையும் காட்டி இருந்தார் ஷிவானி. ஆனால் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டார். இது பலருக்கும் கஷ்டமாக தான் இருந்தது. மேலும் பாலாஜி அழுதே விட்டார்.

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மீண்டும் அத்துமீறும் ஸ்மித்!! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

இப்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர். இதில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது மக்களுக்கு மிகவும் சஸ்பென்ஸாக உள்ளது. ஆனால் முதலில் காப்பாற்றப்பட்டது ஆரி தான். அதன் பிறகு பாலா. மூன்றாவதாக தான் ரியோ காப்பாற்றப்பட்டார்.

அதன் பிறகு ரம்யா மற்றும் கேபி காப்பாற்றப்பட்டனர். இத்தனை நாட்கள் ரம்யா ஜெயிப்பார் என பலரும் பேசி வந்தனர். ஆனால் இப்பொழுது பார்த்தல் கடைசியாக தான் காப்பாற்றப்பட்டுளார்.

அடுத்ததாக தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனா, நிஷா மற்றும் ரமேஷ் போன்றோர் சர்ப்ரைஸாக வீட்டிற்குள் வந்துள்ளனர். இதனால் வீடே கூத்தும் கும்மாளமுமாக மாறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here