பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது இறுதி கட்டத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது சூடுபிடிக்கும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இப்பொழுது பழைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன், கதிர் போன்றோர் இறுதி சுற்று வரை முன்னேறி விட்டனர். இவர்களில் யார் ஜெயிக்க போகிறாரகள் என்று ஆவலுடன் காத்திருந்த நிலையில் அசீம், விக்ரமன், அமுதவாணன் தான் டாப் 3 போட்டியாளர்கள் என்ற செய்திகள் வெளியானது.
அது ஒன்னுக்காக தான் நடிக்க வந்தேன்.., உண்மையை உடைத்த பிரியா பவானி சங்கர்!!!
அப்படி என்றால் மைனா, கதிர் என்ன ஆனார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்த நிலையில் இப்பொழுது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் ஒரு மூட்டையில் 3 லட்சம் பணத்தை வைத்து யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்று கூறிவிட்டார். இந்நிலையில் தான் கதிர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதன் பிறகு மைனா தான் 4வது இடத்தை தக்கவைத்துள்ளார்.