பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் விக்ரமன் ஜனனியை அழுத்த வைத்த சம்பவம் குறித்து இணையத்தில் ஒரு வீடியோ உலா வருகிறது.
இலங்கை பெண்:
தற்போது மக்களுக்கு அதிக அளவு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்து வரும் ஷோ என்றால் அது பிக் பாஸ் தான் . இதுவரை ஐந்து பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த சோவுக்கு இலங்கையில் இருந்து வந்து கலந்து கொண்டவர் தான் ஜனனி. இவர் தற்போது பிக்பாஸ் வீட்டின் குழந்தையாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் பிக்பாஸ் கடந்த வாரம் நடந்த பேக்கரி டாஸ்கில் சரியாக பங்கேற்காத நபர் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரமன் ஜனனி பெயரை குறிப்பிட்டார். மேலும் அமுதவாணன் பேச்சை கேட்டு ஜனனி டாஸ்கில் கலந்து கொள்ளாமல் இருந்தது தவறு என்று கூறினார். இதை தொடர்ந்து ஜனனியிடம், நீங்க இப்படி அடுத்த நபர் பேச்சை கேட்டு விளையாடாதீங்க, தனிப்பட்ட முறையில் விளையாடுங்கள் என்று விக்ரமன் அட்வைஸ் செய்தார். அவர் பேசியதை கேட்ட ஜனனி அழுதபடி கத்தினார்.
நீண்ட காலமாக மணிமேகலையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த அவரது மொத்த குடும்பம் இதுதானா??
அவர் அழுததை தாங்க முடியாமல் ஜனனி ஆர்மி ஒரு வீடியோ ட்ரோலை வெளியிட்டனர். அதாவது பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் குழந்தையை அழ வைத்த மனிதரை எட்டி உதைத்தது போல் இருக்கும் காட்சியை ட்ரோல் செய்துள்ளனர். அந்த குழந்தை முகத்திற்கு பதிலாக ஜனனி முகத்தையும், தூக்கி போட்டு விளையாடும் நபர் முகத்திற்கு பதிலாக விக்ரமன் முகத்தையும் மாற்றி வீடியோ ரெடி செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Again? the editor #BiggBossTamil6 #BiggBossTamil ?? pic.twitter.com/nAuyn4kfXa
— NARESH (@naresh__off_) November 13, 2022