IPL தொடரில் அடுத்த ஆண்டு சீசனுக்கான CSK அணியில் இணைந்தது குறித்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
சென்னை அணி
டி20 உலக கோப்பையை தொடர்ந்து அடுத்ததாக அனைவரது கவனமும் IPL மீது திரும்பி உள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிக்கான அப்டேட்டுகள் தினம்தோறும் வருவதால் ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று IPL தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர். இந்த பட்டியலில் அனைவரது கவனமும் சென்னை அணி மீதுதான் இருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஏனென்றால் சென்னை அணியில் அடுத்த ஆண்டு IPL சீசனில் ஜடேஜா விளையாட மாட்டார் என்று பல்வேறு வதந்திகள் பரவி வந்தனர். ஆனால் சென்னை அணி நிர்வாகம் அந்த வதந்திகளுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்து வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்காக எப்போதுமே விளையாடுவார் என சொல்லி அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டனர். இதையடுத்து ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு மரியாதை செலுத்துவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கதறி அழும் ஜனனி.., தூக்கி போட்டு கொஞ்சிய விக்ரமன்.., வச்சு செஞ்ச மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்!!
அதற்கு கேப்ஷனாக “Everything is fine? #RESTART” என பதிவிட்டுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது தோனிக்கும் அவருக்கும் கேப்டன்சியில் இருந்து வந்த பிரச்சனை தீர்ந்து விட்டது என மறைமுகமாக கூறியுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டம் மீண்டும் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அரங்கேற உள்ளதால் அதனை பார்க்க ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். இது மட்டுமல்லாமல் சென்னை அணி அடுத்த சீசனில் தங்களது சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் பல தரமான சம்பவங்களை நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Everything is fine? #RESTART pic.twitter.com/KRrAHQJbaz
— Ravindrasinh jadeja (@imjadeja) November 15, 2022