தொலைபேசியில் வரும் பெயர் காண்பிக்காத போன் கால்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி அதற்கான மாற்று வழிகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஆணையம் அதிரடி:
இன்றைய நவீன யுகத்தில் செல்போன் இல்லாமல், தனி மனிதனால் வாழ முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த செல்போனில் வரும் அழைப்புகள், இதுவரை நாம் சேமிக்காத நம்பரைக் கொண்டிருந்தால், வெறும் போன் நம்பர் மட்டுமே செல்போன் முகப்பு பக்கத்தில் நமக்கு கிடைக்கும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த எண்ணிற்கான நபரை தெரிந்து கொள்ள விரும்பினால், நம் truecaller என்ற ஆப்பை பயன்படுத்த வேண்டும். தற்போது அதற்கான மாற்று வழிகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்துள்ளது.
நட்பு வளையத்துக்குள் சிக்கிய CSK வீரர்.., அடுத்த சீசனில் காத்திருக்கும் தரமான சம்பவம்!!
அதாவது, வெறும் போன் நம்பர் மட்டுமே காட்டப்படும் அழைப்புகள் இனி வரக்கூடாது எனவும், பெயருடன் காட்டப்படும் அழைப்புகள் மட்டுமே செல்போன்களுக்கு வரவேண்டும் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் TRAI அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பயனர்களிடமிருந்து, KYC விவரங்கள் பெற பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.