விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது சூடுபிடிக்க ஆம்பித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் அடுத்தடுத்து சின்ன சின்ன சண்டைகள் நடந்த நிலையில் அந்த அளவிற்கு பெரிதாக எதுவும் வெடிக்கவில்லை. இன்றைய ப்ரோமோவில் வேல் முருகனுக்கும், சுரேஷுக்கும் இடையில் பெரிதாக சண்டையும் ஆரம்பிக்கிறது.
பிக் பாஸ்
பிக் பாஸில் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக காட்டப்பட்ட ஹவுஸ் மேட்ஸ்கள் இரண்டாவது நாளே சண்டையை ஆரம்பித்தனர். அனிதா சம்பத்திற்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் இப்பொழுது அவருக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனில் 8 நபர்கள் இருக்கின்றனர். இதை ரசிகர்களே ஏதிர்பார்த்திராதவர்கள் இடம் பெற்றது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. இது வரையிலும் மக்கள் ஒட்டு போட்டு ஹவுஸ் மேட்களை வெளியேற்றுவர்.
ஆனால் இப்பொழுது பிக் பாஸ் புதிதாக ஒரு டாஸ்கை கொடுத்துள்ளது. அதாவது எலிமினேஷனில் இருக்கும் 8 நபர்களில் ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது சனம் வெளியேற அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர் தான் அதிக எண்ணிக்கை பெற்று எலிமினேஷனில் இடம் பெற்றவர்.
ஆனால் அவரை வெளியேற்றுவார்களா? அல்லது ரகசிய அறையில் வைத்திருப்பார்களா?? என்று பலரும் யோசித்து வருகின்றனர். மேலும் இன்றைய எபிசோடில் வேல் முருகனுக்கும், சுரேஷுக்கும் ஒரு வேஷ்டியை வைத்து சண்டை ஏற்படுகிறது. இது நாள் வரையிலும் அமைதியாக இருந்த வேல்முருகன் சுரேஷ் இடம் கடுமையாக சண்டையிடுகிறார்.
ஆனால் சுரேஷ் இதனை கண்டுகொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டுள்ளார். இது பார்ப்பவர்களையும் சற்று கோபமடைய தான் செய்கிறது. இவர் எப்படி என்பதை இது வரையிலும் புரிந்து கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.