பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய சம்யுக்தா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சம்யுக்தா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்கள் வரை தாக்கு பிடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் சம்யுக்தா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் அனைவரின் பேவோரைட்டான ஆள் இவர் தான். ஆனால் ஆரிக்கும் இவருக்கும் இடையே எப்பொழுது பார்த்தாலும் முட்டிக்கொண்டு தான் இருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கு முக்கிய ரீசனாக இருந்தது. வெளியே வந்த அவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் வாரிசு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படி இருக்க இவரது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் சம்யுக்தா தனது கணவரை பற்றி அவ்வளவாக எதையுமே சொன்னது கிடையாது. இந்நிலையில் அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.