இயக்குனர் பாலா படைப்பில் நடிகர் சூர்யா நடித்த வணங்கான் திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
வணங்கான் திரைப்படம்:
தமிழ்த்திரையுலகில் மாறுபட்ட கதையம்சம் கொண்டு படத்தை இயக்குபவர் தான் பாலா. இவர் இயக்கிய நந்தா, சேது, நான் கடவுள், பிதாமகன் போன்ற திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. இந்த படங்களின், மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. ஒரு காலத்தில் தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வந்த சூர்யாவின் சினிமா கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் நந்தா.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்ததால் மக்களுக்கு பிடித்து போனது. அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார். இதற்கு முழு காரணமாக இருந்த பாலா, அடுத்த படங்களை இயக்கவும் முடியாமல் தனது நிஜ வாழ்க்கையில் அடி மேல் அடி விழுந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார். இதை பார்க்க முடியாத நடிகர் சூர்யா அண்ணனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தனது சொந்த தயாரிப்பில் ஒரு படத்தை எடுக்க முன்வந்தார்.
அந்த வகையில் இயக்குனர் பாலா படைப்பில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்தார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது சூர்யா விலகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கதையில் ஏற்பட்ட குளறுபடியால் தினமும் சூர்யாவை டார்ச்சர் செய்ததால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. அவர்கள் காம்போவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.