ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இப்போது பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடருக்கான முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து 2 வது போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் அதற்கு இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் அனைத்து வீரர்களும் தொடர்ந்து சொதப்பி வந்தனர். இதனால் ரோகித் சர்மா கேப்டன்சி மீது தான் அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
T20 போட்டிகளில் களமிறங்கும் பெண் அம்பையர்கள்.., BCCI வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!
மேலும் உலக கோப்பையை தவறவிட்டதால் அவரை கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவர் இடத்தில் ஹர்திக் பாண்டியாவை கொண்டு வர வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பிசிசிஐக்கு அறிவுறுத்தி வந்தனர். ஆனால் BCCI இப்போது இந்த ஒரு நாள் தொடரை அவருக்கு ஒரு வாய்ப்பாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேலை இந்த ஒரு நாள் தொடரையும் அவர் வெல்லவில்லை என்றால் அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவு தான் என கிரிக்கெட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.