விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் தற்போது தன் காதலி பற்றிய தகவல் ஒன்றை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிரூப்:
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பித்த நாளில் இருந்து முடியும் வரை நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பைனல் வரை சென்றவர் நிரூப். மேலும் அவர் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகாவின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிகழ்ச்சி முடிந்து வீட்டை விட்டு வெளிவந்த உடன் நிரூப் ஒரு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறிய தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிரூப் அந்த பேட்டியில், நானும் யாஷிகாவும் காதலித்தது உண்மைதான் என்றும், ஆனால் எந்த விஷயத்திலும் இருவருக்கும் செட் ஆகாமல் இருந்த காரணத்தால் பேசி பிரிந்து விட்டதாகவும், அதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் நாங்கள் இன்னும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அதனால் தான் யாஷிகா என்னை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார் என்றும், மேலும் யாஷிகா மூலமாகவே எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார். தற்போது அவர் அளித்த இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்