பிக்பாஸ் சீசன் 3ன் போட்டியாளர் லாஸ்லியா தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் பிக்பாஸ் கவினுடனான தன்னுடைய உறவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் லாஸ்லியா
கடந்த 2019 ம் ஆண்டு விஜய் டிவியில் மிகப்பெரிய ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். அந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 க்கு ரசிகர்கள் ஏகப்பட்ட ஆதரவை கொடுத்தனர். காரணம் அந்த வருடம் பிக்பாஸ் போட்டியாளர்கள், இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர். முக்கியமாக மலேசியாவிலிருந்து வந்த முகேன் அந்த வருட பிக்பாஸ் சீஸனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
முக்கிய வீரர்கள் பார்ம் அவுட் – கவலையில் சிஎஸ்கே அணி!!
எந்த முறையும் இல்லாத அளவுக்கு விசேஷமாக இருந்த அந்த சீசன் மக்களால் பெரிதும் ரசித்து பார்க்கப்பட்டது. அந்த மூன்றாவது சீசனில், போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவுக்கும், கவினுக்கும் ஏற்பட்ட காதல் உறவு மக்களிடையே பேசும் பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் சீசன் முடிந்ததும் இவர்கள் இருவரும் சேர்ந்தோ, தனியாகவோ எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்து வருகின்றனர். கவின் நடிகை அம்ரிதாவுடன் தற்போது ‘லிப்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
லாஸ்லியாவும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். லாஸ்லியா, பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து மலையாள ரீமேக்கான ‘கூகுள் குட்டப்பன்’ என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து அவர் தற்போது பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் கவின் பற்றி கேட்கப்பட்டதான கேள்விக்கு, ‘அது எனக்கும், கவினுக்கும் உள்ள தனிப்பட்ட விஷயம். அதுகுறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனது படம் பற்றி கேளுங்கள்’ என கூறியுள்ளார். தொடர்ந்து அவர் அண்ணன் என அழைத்து வந்த தர்ஷனுடன், ஜோடியாக நடிப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அது பெர்சனல் லைப். இது சினிமா. படத்தில் இருவரும் அந்த கதாபாத்திரமாக நடித்து விட்டு பின்னர் அதிலிருந்து வெளிவரப் போகிறோம்’ என தெரிவித்துள்ளார்.