மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சண்டை, வாக்குவாதம் எதற்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கும் பிக் பாஸில் தற்போது காதலும் மலர்ந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 4:
பல தடைகளை தாண்டி பிக் பாஸ் சீசன் 4 தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இதுவரையிலும் இல்லாத மாதிரி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளே சண்டையை ஆரம்பித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏற்கனவே பரிட்சயம் ஆனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் உண்மையான முகமும் வெளியாகி வருகிறது. மேலும் பிக் பாஸ் பல சிக்கலான டாஸ்குகளை கொடுத்து போட்டியாளர்களிடையே சண்டையையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும் 17வதாக அர்ச்சனாவையும் இந்த பிக் பாஸில் களமிறக்கியுள்ளது. அர்ச்சனா வந்த முதல் நாளிலேயே தூள் கிளப்பி விட்டார் என்றே சொல்லலாம்.
நாளுக்கு நாள் ஒவ்வொரு காட்சிகளை பார்க்கும் போது பிடித்தவர்கள் செய்யும் செயல்கள் கூட மக்களை கடுப்பாகி வருகிறது. இன்று காலையில் வெளியான ப்ரோமோவில் சுவாரசியம் குறைவாக உள்ளவார்கள் என்று ஷிவானி மற்றும் ரமேஷ் அவர்களை கண்ணாடி கூண்டுக்குள் அடைத்தனர் சக போட்டியாளர்கள். இதற்கு ரசிகர்கள் முற்றிலும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது வரையிலும் சந்தோசம், சண்டை, வாக்குவாதம் என அனைத்தையும் ஒரு வாரத்திலேயே பிக் பாஸ் சீசன் 4 இல் நாம் பார்த்து விட்டோம். மேலும் தற்போது பிக் பாஸ் வீட்டில் காதலும் மலர்ந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் அதற்கான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கேப்ரியாலா மற்றும் பாலாஜி இருவரும் அமர்ந்து பேசுகின்றனர்.
அதில் பாலாஜி நான் மனதில் பட்டத்தை உடனே கூறிவிடுவேன் என்று சொல்ல அதற்கு கேப்ரியாலா இன்னும் எதுவுமே சொல்லலையே?? என்று சொல்லி வெட்கப்படுகிறார். இதற்கு பின்னணியில் காதல் பாட்டுடன் விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டுள்ளது. கவின் லாஸ்லியாவிற்கு ஜோடிக்கு பதிலாக இந்த சீனில் இவர்கள் தான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.