‘சோத்துக்கு வழி இல்லனா, கால்ல விழுந்து கெஞ்சு’ – கண்ணம்மாவை சீண்டிய பாரதி!! தெறிக்கும் ப்ரோமோ!!

0
barathi kannamma
barathi kannamma

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கும்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு அதிரடி திருப்பங்களுடன் தொடர் டாப் ரேட்டிங்கில் உள்ளது. தற்போது கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டறிந்த பாரதி சௌந்தர்யா செய்த உதவிகளை கூறி இழிவாக பேசுகிறார். இந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது, சௌந்தர்யா பெட்ரோல் பங்கில் கண்ணம்மா வேலை பார்ப்பதை கண்டுபிடித்ததால் கண்ணம்மா அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். இதனால் வேலை தேடி அலையும் கண்ணம்மாவிற்கு ஒரு ஆசிரமத்தில் வேலை கிடைக்கிறது. இந்த இடத்தையும் கண்டுபிடித்து விடும் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு தெரிந்தால் இங்கு இருந்து சென்று விடுவாள் என்று எண்ணி மறைமுகமாக அவருக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

barathi kaannama
barathi kaannama

அதன் பின் எம்எல்ஏ ஒருவர் மூலம் அந்த ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது போல செய்கிறார். இதனால் உதவித் தொகை என்று கூறி அங்கிருப்பவர்கள் அனைவர்க்கும் பணத்தை தருகிறார். கண்ணம்மாவும் இதனால் சந்தோஷமடைகிறார். எதிர்பாராத விதமாக பாரதி அங்கு வந்து கண்ணம்மாவை இழிவாக பேசுகிறார்.

barathi kannama
barathi kannama

‘இந்த வசதி எல்லாம் என் அம்மா உனக்காக செய்தது’ என்று உண்மையை கூறுகிறார். மேலும் பணம் வேண்டும் என்றால் ‘என் காலில் வந்து விழ வேண்டியது தானே’ என்று கூறி அசிங்கப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மா பணத்தை பாரதியின் முகத்தில் வீசி எறிகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதன் பிறகு தான் கண்ணம்மா அங்கிருந்தும் வெளியேறுகிறார்.

ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் கண்ணம்மாவிற்கு திடீரென இடுப்பு வலியும் ஏற்படுகிறது. இந்த ப்ரோமோவும் சில தினங்களுக்கு முன் வெளியானது. சௌந்தர்யா கண்ணம்மாவை தேடுவதும், கண்ணம்மா பிரசவத்தை வெண்பா பார்க்கப் போவதாகவும் அதில் காட்டப்பட்டிருந்தது. இப்பொழுது கண்ணம்மாவிற்கு நல்ல படியாக குழந்தை பிறக்குமா?? குழந்தை பிறந்ததும் பாரதிக்கு உண்மை தெரிய வருமா?? என்பதே இந்த சீரியலில் ட்விஸ்டாக வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கண்ணம்மாவை தேடி விவாகரத்து வாங்க வந்த பாரதியிடம் குழந்தை பிறந்ததும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து உன் குழந்தை தான் என்று நிரூபிக்க போவதாக கண்ணம்மா கூறியிருந்தார். இனி வரும் எபிசோடுகளில் தரமான சில காட்சிகள் நமக்காக காத்துக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here