பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் பாகுபலி நடிகையா?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர்கள் பற்றிய அதிகாரபூர்வ தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் ஜோடிகள்

2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 4 சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவர் மக்கள் மத்தியில் பிரபலமடைவர். முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது ரித்விகா என மக்கள் மத்தியில் அனைவரும் தற்போது வரை பிரபலமடைந்து வருகின்றனர். இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த 4வது சீசன் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அனைத்து பண்டிகைகளும் பிக் பாஸ் வீட்டிலேயே கொண்டாடும் நிலை ஏற்பட்டது. அதனால் இந்த வருடத்தில் ஜூன் மாதத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. அதன் படி தற்போது அதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இத்தனை நாட்கள் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இணைந்து பிக் பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளனர்.

இடித்து அரைத்த “நண்டு கிரேவி” – ட்ரை பண்ணி அசத்துங்க!!

அதில் வனிதா, மோகன் வைத்தியா, ஷாரிக், ஐஸ்வர்யா ஷிவானி என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான ப்ரோமோவும் இணையத்தில் வெளியானது. ஆனால் அதற்கான நடுவர்கள் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் தற்போது அதனை பற்றிய தகவல் வந்துள்ளது. அதாவது இதில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் தான் கலந்துகொள்ள உள்ளனர். இதனை கேட்ட பலரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here