ஏப்ரல் 29 முதல் மே 3ம் தேதி வரை பொதுமுடக்கம் – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

0
வைரஸ் பரவல் எதிரொலி - மாநிலத்தில் 2 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!!
வைரஸ் பரவல் எதிரொலி - மாநிலத்தில் 2 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!!

நாளுக்கு நாள் அனைத்து மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தற்போது இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோவா மாநிலத்தில் பொதுமுடக்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அந்த மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்கம்:

இந்தியாவில் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நோய்த்தொற்று காரணமாக நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை, தொழித்துறை, போக்குவரத்துத்துறை போன்ற பல துறைகள் இந்த தொற்றினால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் மக்கள் அனைவரும் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது உயிரையும் இழந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதில் இருந்து மக்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே கோவா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மக்களிடையே மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 29ம் தேதி இரவு முதல் மே மாதம் 3ம் தேதி காலை வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

தமிழகத்தில் மே 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை?? உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

மேலும் பொதுமுடக்கத்தின் பொழுது பொது போக்குவரத்து, ஹோட்டல்கள், பப்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அத்யாவசிய பணிகளுக்கும், தொழில் ரீதியான போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்படும் என்று என்று மாநில முதல்வர் அறிவித்தார். மாநில எல்லைகள் மூடாமல் அத்யாவசிய தேவைகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here