உலகநாயகன் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இதில் போட்டியாளராக கலந்து கொண்ட கண்டஸ்டன்டுகளுக்கும் சோசியல் மீடியாவில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஐஷு உலகநாயகன் கொடுத்த விருந்தில் கூட கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்த ஷோவிற்கு பிறகு மற்ற போட்டியாளர்களை கூட சந்திக்கவில்லை.
இந்நிலையில் முதன்முதலாக பிபி ஷோவிற்கு பின் முதன்முதலாக லைவில் வந்து தன் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது உங்களுக்கு பிடித்த பிக்பாஸ் போட்டியாளர் யார் என கேட்டதற்கு பிரதீப் மற்றும் மாயா என கூறியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருடன் நெருக்கமாக பழகிய நிக்சன் குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. மேலும் நிக்சன் பற்றி தனது கருத்துக்களை தெரிவிப்பார் என எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.