போங்க.., நான் அம்மா கிட்ட போறேன்., கண்கலங்கி அழுத ஜோவிகா., என்ன நடந்தது? -ப்ரோமோ இதோ!!

0

விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியாக ஏற்கனவே பிக்பாஸ் வீட்டை விட்டு சென்ற அனன்யா மற்றும் விஜய் வர்மா உள்ளிட்ட இரண்டு பேர் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். மேலும் அடுத்த வாரம் கேப்டன் டாஸ்க் சுவாரஸ்யமாக நடைபெற்ற நிலையில் தற்போது இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜோவிகாவுக்கும் ரவீனாவுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதாவது ரவீனா கேங் என்று எதார்த்தமாக கூறிய நிலையில் கோபப்பட்ட ஜோவிகா, கண் கலங்கியபடி நான் வீட்டுக்கு போறேன், என் அம்மா கூடயே நான் இருந்துக்குறேன் என்று அழுகிறார். அதற்கு ரவீனா நான் உங்களை சொல்லவில்லை என்று, நீங்க தவறாக புரிந்து கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here