கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்திற்கு பாதுகாப்பு அதிகாரியாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனைக்காக எனக்கூறி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக ராஜேஷ் தாஸ்-ஐ கட்டாய ஓய்வில் அனுப்பும்படி உள்துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா உத்தரவிட்டுள்ளார். அதில் உடன்பாடு இல்லை என்றால் அரசிடம் ராஜேஷ் தாஸ் முறையிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
போங்க.., நான் அம்மா கிட்ட போறேன்., கண்கலங்கி அழுத ஜோவிகா., என்ன நடந்தது? -ப்ரோமோ இதோ!!