விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சியை அதிக அளவிலான மக்கள் கண்டு கழித்து வருகின்றனர். தமிழில் இதுவரை 4 சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது. தற்போது 5 வது சீசனுக்கான அனைத்து வேலைகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் 5வது சீசனை தொகுத்து வழங்குவதற்கு கமல்ஹாசனுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையியல் 5 வது சீசன் நடப்பு மாதமான ஜூன் மாதத்தில் ஒளிபரப்பாக்க பிக் பாஸ் குழு திட்டமிட்டது. ஆனால் தமிழகத்தில் நிலவும் கொரோனா பரவல் காரணமாக 5வது சீசனை வருகிற அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாக குழு முடிவு செய்துள்ளது.
மேலும் வரும் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதால் 5வது சீசனில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களும் 2 வது கொரோனா தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.