பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார இறுதியை தொட்டுள்ளது. மேலும் இன்று சனிக்கிழமையை தொடர்ந்து கமல் தான் எப்பொழுதும் முதல் ப்ரோமோவில் இடம் பெறுவார். ஆனால் தற்போது வெளியான ப்ரோமோ பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. பாலா மற்றும் ஆரி இடையே பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ்
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி மற்றும் பாலா இடையே பல சண்டைகள் ஏற்பட்டதை நாம் பார்த்தோம். சுவாரசியம் குறைவாக இருந்த நபர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் பல விபரீதங்கள் நடந்தது. மேலும் மக்கள் மத்தியிலும் பாலாவின் செயல் முகம் சுளிக்க தான் வைத்தது. ஆரி முழுசாக பேசி முடிப்பதற்குள் பாலாவே காத்த ஆரம்பித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஓய்வறையில் மிக பெரிய சண்டையாக முளைத்தது. பாலாஜி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் ஆரியை ஒருமையில் பேசினார். இதனால் அவரின் ரசிகர்கள் கொந்தளித்தனர். வழக்கம் போல சண்டை தானே என்று பலரும் பேசாமல் இருந்து விட்டனர்.
ஆனால் இந்த சண்டை தற்போது வரை நீண்டுள்ளது. பலரும் இன்றைய ப்ரோமோவிற்காக காத்திருந்தனர். ஆனால் இன்றைக்கு வெளி வந்த ப்ரோமோ பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. எப்பொழுதுமே சனி கிழமையில் கமலின் ப்ரோமோ தான் முதலில் வெளி வரும்.
ஆனால் சற்றே மாறுபாடாக வேறு ப்ரோமோ வந்துள்ளது. ப்ரோமோ ஆரம்பத்தில் பாலாஜி காதல் கண்கட்டுதே என்று எதுக்கு சொன்னிங்க என்று கேட்க அதற்கு ஆரி இப்போ இப்படி பேசுறல ஷிவானி அம்மா வந்தப்போ பேச வேண்டியது தானே என்று சொல்கிறார். பாலாஜி இதனால் கத்த ரம்யா இரண்டு பேரையும் தூங்க சொல்கிறார்.
மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!
அதற்கும் ரம்யாவிடம் வேதஜோ எதோ சொல்ல அவரும் கோவமடைகிறார். மறுபடியும் ஷிவானி விஷயத்தை யாரு ஆரம்பிச்சது என்று கேட்க பாலாஜி சைக்கோ போல கத்துகிறார். ஷிவானி விஷயத்தை பேசுறதை நிறுத்தியா.. என்று காட்டுத்தனமாக தலையணையை தூக்கி போட்டு கத்துகிறார். இதனால் பலரும் ஷாக்கில் உள்ளனர். இன்றைய எபிசோடுகாகவும் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலில் உள்ளனர்.