இந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் என்ற ஆவல் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்க வண்ணம் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டதை அடுத்து தற்போது இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 4:
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோ தான், பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது 3 சீசன்களை கடந்து தற்போது பிக் பாஸ் 4 சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த போட்டி கொரோனா பரவல் காரணமாக சற்று தாமதம் அடைந்து கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகின்றது. மற்ற சீசன்களை போல் அல்லாமல் இந்த சீசன் மிகவும் காரசாரமாக ஆரம்பத்தில் இருந்தே சென்று கொண்டு இருக்கின்றது.
பல சண்டைகள், பல குழப்பங்கள் என்று இந்த சீஸனில் எல்லாருமே கொஞ்சம் எடக்கு மடக்காக தா இருந்து வருகின்றனர். இந்த போட்டியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நபர் மக்களால் நிராகரிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுவார். அப்படியாக முதலில் நடிகை ரேகா, அதனை தொடர்ந்து பாடகர் வேல்முருகன் மற்றும் இந்த வாரம் சுரேஷ் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில் இந்த வாரம் அஜீத், அர்ச்சனா, பாலாஜி, ஷிவானி, ரம்யா பாண்டியன், கபீரிலா மற்றும் சுசித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இந்த வாரம் அஜீத் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம், பிக் பாஸ் வீட்டில் மிகவும் சுவாரசியம் குறைந்த போட்டியாளராக அவர் தான் கருதப்படுகிறார். ஏற்கனவே அவர் இரு முறை நாமினேட் செய்யப்பட்டுள்ளார். கூடுதலாக, ஒரு முறை அவர் ஏவிக்ஷனும் செய்ய பட்டார். ஆனால், ஏவிக்ஷன் பாஸ் வைத்திருந்ததால் அவர் தப்பித்து கொண்டார். இந்த முறை அவர் தான் செல்வார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அந்த வீட்டில் மக்களை அதிகமாக ஈர்க்கத்தவர் என்றதால் அவர் எலிமினேட் ஆக வாய்ப்புகள் அதிகம்.