கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்ட சாதி மறுப்பு திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ:
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான பிரபு தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரின் மகள் சௌந்தர்யா எனும் பெண்ணை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். 39 வயதான இவர் 19 வயதான பிராமண சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எம்எல்ஏ தனது மகளை மூளைச்சலவை செய்து விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் திருமணம் நடந்த வீட்டு முன்பு தற்கொலைக்கு முயன்றார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நீதிமன்றத்திற்கு சென்றது. அதில் நேரில் ஆஜரான சௌந்தர்யா கணவர் பிரபு உடன் செல்ல சம்மதம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், தனது மகளை பிரபு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக சாமிநாதன் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் கட்சி தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.