பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர்கள் இவர்கள் தானா?? அப்போ ஒரே கொண்டாடட்டம் தான்!

0

விஜய் தொலைக்காட்சியில் வரும் மே 2 ஆம் தேதி “பிக் பாஸ் ஜோடிகள்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கின்றது. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் குறித்த விவரம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

“பிக்பாஸ் ஜோடிகள்” நிகழ்ச்சி

ஹிந்தியில் 14 ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பாகியும் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சி “பிக் பாஸ்” தான். இந்த நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிவடைந்தது. இப்படியாக இருக்க, “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் அனைத்து சீசன் போட்டியாளர்களையும் இணைக்கும் வகையில் தற்போது “பிக் பாஸ் ஜோடிகள்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

‘தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்’ – உயர்நீதிமன்றம் பகீர் குற்றச்சாட்டு!!

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஜோடி சேர்த்து நடனம் ஆட இருக்கின்றனர். இது குறித்த ஒரு ப்ரோமோ நேற்று வெளியானது. அதில் சாண்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்துகிறார். அதே போல் கடைசியாக இருவர் வருகின்றனர். அவர்கள் தாங்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் என்று கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர்களை கடைசி வரை ப்ரோமோவில் காட்டவில்லை. அதில் இருப்பவர்கள் ப்ரியாமணி மற்றும் பிரபு தேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் ஆக இருக்கலாம் என்ற கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here