‘தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்’ – உயர்நீதிமன்றம் பகீர் குற்றச்சாட்டு!!

0

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக மக்கள் அனைவரையும் பாதித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படைந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் வேகமெடுத்து வரும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடைபெற்றது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அரசியல் கட்சிகள் யாவும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை. பிரச்சாரத்தின் பொழுது மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் மறந்து விட்டனர்.

கண்ணன் தனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டிய விஷயத்தை முல்லையிடம் உளறும் ஐஸ்வர்யா – கண்ணனின் நிலை என்ன??

தற்போது இதனை சுட்டி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகள் பாதுகாப்பின்றி இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே கொரோனாவின் இரண்டாவது அலைக்கு காரணம். நீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும் அதனை தேர்தல் ஆணையம் காதில் கூட வாங்கவில்லை என்று பகிரங்கமாக தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here