பத்ரி படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஜானு -வாக அறிமுகம் ஆனவர் நடிகை பூமிகா. இவர் தனது முதல் படத்திலேயே முன்னணி ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது. தற்போது பட வாய்ப்பு இல்லாத நிலையில் பூமிகாவை ஹிந்தி பிக் பாஸ் 15 வது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் அதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் வரும் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டாராம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விஜய் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை பூமிகா. அந்த படம் வெற்றி பெறவே அந்த காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். மேலும் குறிப்பிட்ட கால கட்டத்துக்கு பிறகு வாய்ப்புகள் குறையவே பிற துறையில் தன் கவனத்தை திரும்பி விட்டார். இருப்பினும் தற்போது ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்.
இதையடுத்து பிரபலம் ஒருவர் பூமிகாவை ஹிந்தி பிக் பாஸ் 15 வது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் அது உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வாங்கி தரும் என்று கூறியுள்ளார். அதற்கு பூமிகா எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எவ்வித ஆசையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல் பூமிகா தன்னை நட்சத்திர போட்டியாளராகவது கலந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
மேலும் இதற்கு முன்பு பிக் பாஸ் 1,2,3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நிறைய முறை அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை கேமரா முன் நடிப்பது தான் என்னுடைய வேலை தவிர கேமரா முன் வாழ்வது என்னுடைய வேலை இல்லை என தனது மறுப்பை அழுத்தமாகக் கூறியுள்ளார் பூமிகா.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!