இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை – இப்போவே தயாரான கோவை மாவட்டம்!!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தற்போது குறைந்துள்ள நிலையில், கொரோனா வைரஸின் மூன்றாம் அலையைத் தடுக்க கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை:

தமிழ்நாட்டில் முதல் அலையை விட இரண்டாவது அலை வீரியமிக்கதாகவே இருக்கிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்தே வருவது இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக கையாண்டு கேஸ்கள் குறைய வழிவகை செய்தாகிவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் 3ஆவது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராகி வரும் நிலையில், தற்போது “தமிழக அரசு கோவை மாவட்டத்திற்குத் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அதன் படி கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கென 240 படுக்கை வசதிகள் கொண்ட தனி மையத்தைத் தன்னார்வல அமைப்புகள் இணைந்து தத்தெடுத்து உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்  3ஆவது அலையை எதிர்கொள்ளும் வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை மையம், கூடுதல் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கூடிய இடங்கள் உட்பட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here