விஜய் டிவியில் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் போய்க்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா பார்ட் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பாரதி கண்ணம்மா:
வெண்பாவின் சதியால் பாரதியை பிரியும் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறினார். பாரதி முன்பு வாழ்ந்து காட்டுவேன் என சபதமிட்டு வெளியேறிய கண்ணம்மா வெளியேறிய கடந்த சில எபிசோட்களாக நடந்து கொண்டிருக்கிறார். இதற்கு மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வந்தனர். இப்பொழுது துர்கா கண் முழித்து கண்ணம்மாவை தேடி வருகிறார்.
எங்கு தேடியும் கண்ணம்மா கிடைக்காததால் சௌந்தர்யாவிடம் வந்து வெண்பா தான் தன்னை கண்ணம்மாவை கொலை செய்ய சொன்னார் என்ற உண்மைகளை கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்து பாரதியிடம் கூறுகிறார். ஆனால் பாரதி இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
மேலும் தலைக்கு தானே அடிபட்டது இதற்கும் உன்னால் குழந்தை பெற முடியாததற்கு என்ன சம்மந்தம் என்று பலரும் கேட்டும் பாரதிக்கு கண்ணம்மாவின் மேல் இருக்கும் சந்தேகம் அடங்கவில்லை. தற்போது சௌந்தர்யாவிற்கு வெண்பாவை பற்றிய ஓரளவிற்கு உண்மை தெரிய வருகிறது. இனி வரும் எபிசோட்களில் பாரதிக்கு கண்ணம்மாவை பற்றிய உண்மை தெரிய வாய்ப்புள்ளது.
மேலும் தற்போது பாரதி கண்ணம்மாவை பற்றிய புதிய செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது உண்மை தெரிந்த சௌந்தர்யா வெண்பா தலையில் துப்பாக்கியை வைப்பது போல புகைப்படம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே துர்காவை கொள்ள நினைத்த வெண்பாவின் முயற்சியை தோற்கடித்தார் துர்கா.
இந்த சம்பவங்களை பார்க்கும்போது கண்ணம்மா மீது அதிக பாசத்துடன் இருக்கும் துர்கா வெண்பாவின் முகத்திரையை கிளிப்பார் என்பது தெரிகிறது. மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் பார்ட் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் அவருக்கு இரட்டை குழந்தை பிறக்கும் எனவும், அதில் ஒரு குழந்தை கருப்பாகவும், மற்றொரு குழந்தை வெள்ளையாகவும் பிறக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் எபிசோடுகளில் வெண்பா பற்றிய உண்மை தெரிய வந்து பல மாற்றங்களுடன் சீரியல் ஒளிபரப்பாக போகிறது. வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.