ஹேமாவை பாரதி வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா…!பயத்தில் ஒளிந்துகொள்ளும் சௌந்தர்யா!!!

0

எப்பொழுதும் டாப் சீரியல்கள் வரிசையில் ஒன்றாக இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய கதையாக , ஹேமாவை பாரதி வீட்டுக்கு அழைத்து செல்கிறார் கண்ணம்மா. அவர் வருவதை பார்த்த சௌந்தர்யா மற்றும் வேணு பயத்தில் ஒளிந்து கொள்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை அறிந்து தன் மாமியார் சௌந்தர்யாவை நோக்கி சரமாரியாக கேள்விகளை கேட்கிறார் கண்ணம்மா. இதையடுத்து இன்றைய கதையாக, கண்ணம்மாவின் கேள்விகள் குறித்து சௌந்தர்யாவும் வேணுவும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் இது பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் கண்ணம்மா தனது குழந்தைக்கு என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது தனது பிரசவத்தின் போது என்ன நடந்தது எனவும், மேலும் இதற்கு வெண்பா காரணமாக இருக்கலாமா ? என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர் இது பற்றி யாரிடம் கேட்பது என்று சிந்தித்தபடி உள்ளார். இதையடுத்து பொழுது விடிகிறது. அப்பொழுது தூங்கி எழுந்து வரும் ஹேமா தன் கனவில் அப்பா வந்ததாகவும் எப்பொழுது வீட்டிற்கு வருவாய்? என கேட்டதாகவும் கூறுகிறார். அப்பொழுது கண்ணம்மா பாரதி தான் லட்சுமியை  தன்னிடம் இருந்து பிரித்து தாய் பாசம் இல்லாமல் செய்கிறார். நாமும் ஏன் ஹேமாவை அப்படி செய்ய வேண்டும் என நினைத்து கொண்டு ஹேமாவிடம் இன்னைக்கு நாம உங்க வீட்டுக்கு போகலாம் போய் கிளம்பு என கூறுகிறார்.

இதையடுத்து இருவரும் பாரதி வீட்டிற்கு கிளம்புகின்றனர். இந்நிலையில் பாரதி வீட்டில் இருப்பதை நினைத்து சௌந்தர்யாவும் வேணுவும் பயப்படுகின்றனர். அதாவது கண்ணம்மா எந்த  நேரத்தில் வேண்டுமானாலும் வந்து  தனது இன்னொரு குழந்தை பற்றி கேட்டார் என நினைத்து இருவரும் பயப்படுகின்றனர். அந்த நேரத்தில் ஹேமா அங்கு வருகிறார். அவர் பார்த்து சந்தோஷப்பட்டு பாரதி கட்டி தழுவுகிறார்.

அவரை பின்தொடர்ந்து கண்ணம்மா வருகிறார். அவரை பார்த்து சௌந்தர்யாவும் வேணுவும் ஒளிந்து கொள்கின்றனர். அதன் பிறகு கண்ணம்மாவை பார்த்த லட்சுமி ஓடிவந்து அவரை கட்டி அணைக்கிறார். அதன் பின்னர் லட்சுமியும் ஹேமாவும் பேசிக்கொள்கின்றனர். மேலும் லட்சுமி இங்க விளையாட யாரும் இல்லை எனக் கூற அதற்கு ஹேமா இங்க தான் அப்பா இருக்கிறார் அவர் கூட விளையாட வேண்டியது தானே என கேட்கிறார்.

அதன் பின்னர் பாரதியை பார்த்து நீங்க லட்சுமி கூட விளையாடவில்லையா? என  ஹேமா கேட்கிறார். அந்த வேளையில் அஞ்சலி குறுக்கிட்டு நாம ரெண்டு பேரும் விளையாடலாம் என கூறி இருவரையும் உள்ளே  அழைத்து செல்கிறார்.

இந்நிலையில் கண்ணம்மாவும் பாரதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். அதன் பின்னர் கண்ணம்மா சௌந்தர்யாவை தேடுகிறார். ஆனால் சௌந்தர்யா கண்ணம்மாவை  பார்த்து ஒளிந்து கொள்கிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மாவிடம் ஹேமாவை பார்த்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து ஹேமாவை பார்த்து கொண்டதற்கு எவ்வளவு தொகை தர வேண்டும் என திமிராக கேட்கிறார். அதற்கு அன்பை  விற்கிறது இல்லை என்று கூறுகிறார்.

அதற்கு பாரதி, ஹேமாவை கவனித்து கொண்டதற்கு கைமாறாக  கண்ணம்மாவிடம், லட்சுமி மாதிரி ஓ குழந்தையும்  நான் படிக்க வைக்கிறேன் இங்க கூப்பிட்டு வா என கூறுகிறார். அதற்கு  சரியான பதிலடி ஒன்றை கொடுக்கிறார் கண்ணம்மா. மேலும் இவை அனைத்தையும் மறைந்து இருந்து சௌந்தர்யாவும் வேணுவும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறாக இன்றைய கதை முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here