தன் அண்ணன் தனக்காக செய்த காரியத்தை நினைத்து கதறி அழும் கண்ணன்…!ஆறுதல் கூறி தேற்றும் ஐஸ்வர்யா!!!

0

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்று, தன் மீது கோபம் இருந்தாலும் தனக்காக இந்த மளிகை பொருட்களை அனுப்பி வைத்து உள்ளனர் தன்னுடைய அண்ணன்கள் என்பதை அறிந்து வேதனையில் கதறி அழுகிறார் கண்ணன். அவரை சமாதானம் செய்கிறார் ஐஸ்வர்யா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு இன்னும் இரு வாரங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதை நினைத்து குடும்பம் முழுவதும் சந்தோஷத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று, கண்ணனிடம் நாப்கின் வாங்க பணம் கேட்கும் ஐஸ்வர்யா. பணம் இல்லாமல் குடும்பத்தை வழி நடத்துவது பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் ஜீவா மற்றும் கதிர் அனுப்பிவிட்ட கடை பையன், கண்ணை கூப்பிட்டு, இந்த வீடு ஏற்பாடு செலுத்த பெரியவர் இந்த மளிகை பொருட்களை கொடுத்து விட்டதாக கூறி கொடுத்து செல்கிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் சந்தேகத்துடன் அதை பிரித்து பார்த்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அதில் கண்ணனின் கையில் ஒரு பேப்பர் அகப்படுகிறது. அதை பார்க்கும் கண்ணன் இது என் ஜீவா அண்ணனின் கையெழுத்து என கூறி அழுகிறார்.

 

எவ்வளவு தான் தன்  மீது கோபம் இருந்தாலும் தன் மீது  தன் அண்ணன்களுக்கு உள்ள பாசத்தை எண்ணி கதறி அழுகிறார் கண்ணன். அவருக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றுகிறார். அதன் பின்னர் குழந்தை பிறப்பு குறித்து தனத்திடம் மீனா மற்றும் சிவகாமி கூறுகிறார்.

மேலும் இருவரும் பிரசவ வலி குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது தனத்திற்கு வலி ஏற்படுகிறது. இந்நிலையில்  மீனா மற்றும் முல்லை பதறிப் போகின்றன . அதற்கு சிவகாமி இது ஒன்னும் இல்லை. பொய் வலி தான் தனம்  நடந்த கொடுத்தால் சரியாகிவிடும் என்று கூறி நடக்க சொல்கிறார். நடந்த பிறகு தனத்திற்கு வலி குறைந்துவிடுகிறது.

இருப்பினும் பற்றதுடனே இருக்கின்றனர் மீனா மற்றும் முல்லை. அதற்கு சிவகாமி இது வெறும் பொய் வலி தான் என்று குறி சமாதானம் செய்து அறிவுரை கூறுகிறார். அதன் பின்னர் கடை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த மூர்த்தியிடம், முல்லை தனத்திற்கு வலி வந்ததாக கூறுகிறார்.

பதறிப்போன ஜீவா மற்றும் கதிர் வண்டியை பிடிக்க கிளம்புகின்றனர். அப்பொழுது குறுக்கிடும் தனத்தின் அம்மா இது பொய் வலி எனவும், இப்படி அடிக்கடி நடக்கும் எனவும் கூறுகிறார்.

 உடனே ஜீவா வலிக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா? என கேட்க, அதற்கு மீனா இந்த கேள்வியை நான் குழந்தை பெற்று கொள்ளும் போது கேட்கவில்லை என கிண்டலாக கேட்கிறார். இவ்வாறு அனைவரும் குழந்தை பிறப்பு குறித்து சந்தோஷமாக பேசிக் கொண்டு உள்ளனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here