விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. அதாவது ராதிகாவுக்கு ஒரு பக்கம் சப்போர்ட் செய்தாலும், இன்னொரு பக்கம் இனியாவை விட்டுக் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் கோபி. மேலும் இனியாவை பிரிந்த துக்கத்தில் பாக்கிய வீடு நொந்து போய் உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஏன் இப்படி கஷ்டத்தை ஒரேடியா கொடுத்து என்ன கொல்றீங்க கடவுளே என்று புலம்பி வருகிறார் பாக்யா. மேலும் சீரியல் நகர்வதை வைத்து பார்த்தால் ராதிகா படும் அவமானம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனால் வன்மத்தை வளர்த்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் ராதிகா. ஏனெனில் கோபியை திருமணம் செய்த நாளில் இருந்தே கேட்க கூடாத வார்த்தை எல்லாத்தையும் கேட்டு விட்டார்.
உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜெய்பீம்.., தயராகும் இரண்டாம் பாகம்!! இவர் தான் ஹீரோ!!
இப்படி இருக்க இப்பொழுது சீரியல் பற்றிய அப்டேட் வைரலாகி வருகிறது. அதாவது சீரியல் நேரம் மாற்றியமைக்க போகிறார்களாம். அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் இபொழுது தான் விறுவிறுப்பாக போயிக்கொண்டிருப்பதால் 8.30 மணி இனிமேல் ஒளிபரப்பாகுமாம். அதே போல பாக்கியலட்சுமி சீரியல் 9 மணிக்கு ஒளிபரபபாகுமாம். ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியவில்லை.