உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜெய்பீம்.., தயராகும் இரண்டாம் பாகம்!! இவர் தான் ஹீரோ!!

0
உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜெய்பீம்.., தயராகும் இரண்டாம் பாகம்!! இவர் தான் ஹீரோ!!
உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜெய்பீம்.., தயராகும் இரண்டாம் பாகம்!! இவர் தான் ஹீரோ!!

நடிகர் சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இருப்பவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் வசம் இழுத்துக் கொண்டார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உண்மை சம்பவத்தை தழுவி ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி யில் ரிலீசாகும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி அதிக விருதுகளையும் தட்டி சென்றது. சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் கௌதம் கார்த்திக்கின் மாமனார், மாமியார் இவங்க தானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

அப்போது படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் நிஜத்தில் இதுபோன்ற பல வழக்குகளை வாதாடி ஜெயித்துள்ளார். அதை வைத்து பார்க்கும் போது அதில் ஒரு வழக்கை எடுத்து ஜெய் பீம் 2 படத்தை எடுப்பேன் என்றும், அதிலும் சூர்யா தான் நடிப்பார் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here