விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா என்று பல மீம்ஸ்களும் வைரலானது. தற்போது பாரதி கண்ணம்மாவின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இன்னும் பல பரபரப்பான சம்பவங்கள் நமக்கு காத்திருக்கிறது என்று தெரிகிறது.
பாரதி கண்ணம்மா:
தற்போது டாப்பில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று ஏனெனில் சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களுடன் போயிக்கொண்டிருக்கிறது. இது வரையிலும் பாரதி கண்ணம்மாவின் காதல் காட்சிகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு அதிர்ச்சி தரும் விதமாக அவர்களிடையே பிரிவையும் ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர்.
இதுவரையிலும் தன்னை அவமதித்த பலரையும் மன்னித்து அவர்களுடன் அன்பாக நடந்து கொண்டு அமைதியாக இருந்த கண்ணம்மா தன் கற்பின் மீது சொன்ன பழியால் வெகுண்டெழுந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
கடந்த 2 எபிசொட்களாக ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் கண்ணம்மாவிற்கு மீம்ஸ்களையும் போட்டு தாக்கினர். இந்த சீரியலில் அடுத்தகட்டமாக பல விறுவிறுப்பான கட்டங்கள் வர உள்ளன. அதற்கான போட்டோக்களும் வெளியாகியுள்ளது.
இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த கண்ணம்மாவின் தாயார் தற்போது இந்த சீரியலில் வரவுள்ளார். அகில், கண்ணம்மா மற்றும் கண்ணம்மாவின் தாயார் ஜெயில் முன்பு எடுத்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும் அகில் கண்ணம்மாவுடன் தள்ளுவண்டி கடையில் வேலை செய்வது போலவும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் வெண்பாவிற்கு தலையில் அடிபட்டது போல புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது பாரதிக்கு உண்மை தெரிய வந்துள்ளதாக தெரிகிறது. வெண்பாவின் சித்தப்பா பாரதியிடம் உண்மையை சொல்வாரா? இல்லையா? என்பதை வரும் எபிசோட்களில் பொருத்திருந்து பார்ப்போம்.