வாரத்தின் முதல் நாளான நேற்று தங்க விலை சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், இன்று தங்க விலை யாரும் எதிர்பாரா வண்ணம் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
தங்க விலை ஏற்றம்:
கொரோனா நோய் பரவல் காரணமாக பல பாதிப்புகளை நாம் அனைவரும் சந்தித்து வருகிறோம். அதில் குறிப்பாக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. பல தொழில்கள் முடங்கியதால் அனைத்து முதலீட்டாளர்களும் தங்களது எதிர்கால பாதுகாப்புக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணி தங்கத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
முதலீட்டாளர்கள் இப்படி தடாலடியாக தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்தது. கொரோனா பொது முடக்க காலத்தில் பொதுமக்கள் தங்களின் தேவைக்காக நகை வாங்கவில்லை என்று கூறப்பட்டாலும், விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். தங்க விலை வரலாறு காணாத வகையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 43 ஆயிரத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து உயர்வு:
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் சற்று குறைந்தது, இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். ஆனால், இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்க விலை படிப்படியாக உயர்ந்து தான் வந்தது. வாரத்தின் முதல் நாளான நேற்று சற்று குறைந்த காரணத்தால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். ஆனால், இன்று தங்க விலை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 608 ரூபாய் உயர்ந்து 38,518 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிராம் ஒன்றிற்கு 76 ரூபாய் உயர்ந்து 4,816 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க வெள்ளியின் விலையும் சத்தம் இல்லாமல் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் அதிகரித்து 63.80 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு கிலோ வெள்ளி 63,800 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.