முடிவுக்கு வருமா பாரதி கண்ணம்மா சீரியல்?? இயக்குனர் பிரவீன் பென்னட் பேட்டி!!

0

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’, முடிவுக்கு வரப்போகிறதா என ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில், தொடரின் இயக்குனர் பிரவீன் பென்னட் தற்போது ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் திரைக்கதை தற்போது சூடு பிடித்துள்ளது. இந்த வாரம் வெளியான பல சுவாரசியங்கள் நிறைந்த ப்ரோமோவானது இணையத்தில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த ப்ரோமோவில் கண்ணம்மா 8 வருடங்கள் கழித்து பாரதியின் வீட்டுக்கு வருகிறார் என்பது தான். இந்த ப்ரோமோ வெளியானது துவங்கி ‘பாரதி கண்ணம்மா’ தொடர் முடிவு பெறப் போகிறதா என ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன.

14 வது ஐபிஎல் தொடர் – மீண்டும் ஸ்பான்சர் ஆகும் விவோ!!

ரசிகர்களின் இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக இந்த தொடரின் இயக்குனர் பிரவீன் பென்னட் தற்போது தகவல் ஒன்றை பேட்டி மூலம் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேருவார்களோ, அப்போது தான் இந்த தொடர் முடிவடையும் எனக் கூறியுள்ளார்.

‘பாரதி கண்ணம்மாவில்’ தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எபிசோடில் கண்ணம்மா பாரதியின் வீட்டில் உள்ளார். ஹேமா யாருடைய குழந்தை என்பது கண்ணம்மாவுக்கும் சரி, பாரதிக்கும் சரி எதுவும் தெரியாது. இந்த உண்மைகள் எல்லாம் எல்லாருக்கும் தெரியவரவே இந்த தொடர் முடிவடையும். அதனால் இப்போதைக்கு இந்த தொடர் முடிவடையப்போவதில்லை என்பது ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here