முன்னாள் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியை குறித்து பத்திரிகையாளர் பயில்வான் தனது யூடியூப் சேனலில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் கவுண்டமணி:
தமிழ் திரைத்துறையில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் தான் நடிகர் கவுண்டமணி. அவர் கொடுக்கும் கவுண்டருக்கு சிரிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த வகையில் காமெடியில் பின்னி பெடல் எடுத்தவர் தான் கவுண்டமணி. சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கவுண்டமணி தற்போது அன்பரசன் படைப்பில் உருவாக இருக்கும் பழனிச்சாமி வாத்தியார் படத்தில் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் தனது யூடியூப் சேனலில் கவுண்டமணியை குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது ஆவாரம் பூ படத்தில் பயில்வானுக்கு ஜோடியாக ஷர்மிலி என்ற ஒரு நடிகை நடித்திருந்தார். அப்படத்தில் ஷர்மிலியை தூக்கி சுற்றும் ஒரு காட்சி படமாக எடுக்கப்பட்டது. அந்த காட்சியை டப்பிங் செய்யும் போது கவுண்டமணி பார்த்துவிட்டு நீ எப்படி அவளை தூக்கி சுற்றலாம் என ஷர்மிலியை வைத்து கொண்டு திட்டியதாக கூறினார்.
பிக் பாஸ் ஜி பி முத்து காதலிக்கு எதிராக முக்கிய வழக்கு? குண்டர் சட்டத்தில் அதிரடி கைது!!
மேலும் ஷர்மிலிக்கு சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கவுண்டமணியுடன் காமெடி ரோலில் நடித்து வந்ததால் ஷர்மிலிக்கு மற்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதுமட்டுமின்றி ஷர்மிலிக்கு உடல் எடை அதிகரித்ததால் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்று தெரிவித்தார். கவுண்டமணினாலதான் அவருடைய டோடல் வாழ்க்கை மாறியது என்று பயில்வான் தெரிவித்தார்.