டிக் டாக் புகழ் ஜி பி முத்து உடன் இணைந்து, ரீல்ஸ் வீடியோவில் அசத்திய ரவுடி பேபி சூர்யா மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம், குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பரபரப்பு உத்தரவு:
டிக் டாக் செயலி மூலம், புகழின் உச்சிக்கு சென்றவர்களில் ஒருவர் ஜி பி முத்து. இதில் கிடைத்த வெற்றியை வைத்து, ஜி பி முத்து பிக்பாஸ் 6 சென்றார். ஆனால் இதில் பாரத விதமாக அதிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில் ஜிபி முத்து, டிக் டாக் ரவுடி பேபி உடன் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை செய்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து, பலரும் இவர்களை லவ்வர்ஸ் எனக்கு கிண்டல் அடித்து வந்தனர். இந்த நிலையில் டிக் டாக் ரவுடி பேபி சூர்யா, கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை தகாத முறையில் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இது குறித்த வழக்கில் அவரும், அவருடைய நண்பர் சிக்கந்தர் ஷாவும் குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரவுடி பேபி சூர்யாவின் டிக் டாக் வீடியோகளையும், அதில் அவர் காட்டிய ஆபாசங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கில் தற்போதைக்கு ஏந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டனர். இதனால், இவர் மீதான குண்டர் சட்டம் தற்போது மீண்டும் தொடர்கிறது.