பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை குறித்து பேசியது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
பிரபல இயக்குனரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவரும் லீடு ரோலில் நடிக்கின்றனர். மேலும் சூப்பர் ஸ்டாரும் கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து 60 பவுன் மதிப்புள்ள நகைகள் திருடு போன சம்பவம் அவரை அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை குறித்து பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அவர் பேசியதாவது, தனுசை விவாகரத்து செய்த பின்னர் ஐஸ்வர்யா இரண்டு முக்கிய பிரபலங்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தெரிய வர, ஐஸ்வர்யாவை அழைத்து கண்டித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
IPL 2023: ஐபிஎல் தொடரை இழக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்?? உறுதிப்படுத்திய டேவிட் மில்லர்!!
இதை கேட்ட ரசிகர்கள் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பது தான் உங்கள் வேலையா?? என்று ரசிகர்கள் பயில்வானை வெளுத்து வாங்கி வருகின்றனர்.