கண்ணம்மாவின் இரட்டை குழந்தை ரகசியத்தை தெரிந்து கொள்ளும் கோமதி – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் கண்ணம்மாவின் குழந்தையை கடத்த திட்டமிடும் வெண்பாவின் சதித்திட்டம் சௌந்தர்யாவால் முறியடிக்கப்படுகிறது. மேலும் குழந்தைக்கு இன்றைய எபிசோடில் பெயரும் வைக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா

முந்தைய எபிசோடில் கண்ணம்மா குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவிற்கு வெண்பா வரவே அவருக்கு கண்ணம்மாவும் இங்கு இருக்கும் விஷயம் தெரிய வர எங்கே பாரதிக்கு உண்மை தெரிந்து விடுமோ என்று பயப்படுகிறார். மேலும் கண்ணம்மாவின் குழந்தையை கடத்தவும் திட்டமிடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் துர்கா வேறு வெண்பாவின் சதியை முடியடிக்க ஒவ்வொரு கோவிலாக தேடிக்கொண்டுள்ளார். மேலும் கோமதி கண்ணம்மாவின் குழந்தையை கடத்தியும் செல்கிறார். அப்பொழுது எதேர்ச்சியாக அங்கிருந்து வரும் சௌந்தர்யா கோமதியை பார்த்து விட குழந்தையையும் வாங்குகிறார்.

இன்றைய எபிசோடில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா தொடங்குகிறது. அப்பொழுது ஐயர் குழந்தையின் பெயரை கேட்க பாரதியின் காதில் சௌந்தர்யா ‘ஹேமா’ என்று கூறுகிறார். இதனால் பாரதியும் அதிர்ச்சியடைகிறார். பாரதிக்கு பழைய கல்லூரி நியாபகங்கள் வர குழந்தையின் பெயரை சத்தமாக கூறுகிறார்.

வெண்பாவிற்கு இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதனால் கோவமடைகிறார். அடுத்ததாக கண்ணம்மா குழந்தைக்கு தன் அத்தையின் பெயரை வைக்கிறார். அதோடு லட்சுமி என்ற பெயரை சேர்த்து ‘சௌந்தர்ய லட்சுமி’ என்று பெயர் வைக்கிறார். மேலும் அங்கு பாரதி குழந்தையை பார்த்து கண்கலங்குகிறார்.

இனிமேல் என் உலகமே நீ தான் என்று கூறுகிறார். உனக்கு என்ன வேணுமோ அதை என்கிட்ட கேளு, என் உயிரை கொடுத்தாவது அதை நிறைவேத்துவேன். நீ என்ன படிக்கணும்னு ஆசைப்பட்டாலும் அதை நான் நிறைவேத்துவேன். மேலும் நீ தான் என் குழந்தை என்று கூறுகிறார்.

இதனால் வேணு, சௌந்தர்யா மற்றும் அகிலன் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். அதன் பிறகு சௌந்தர்யாவும், வேணுவும் தனியாக உட்கார்ந்து நடந்த கதைகளை கூறி வருத்தப்படுகின்றனர். மேலும் கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள் பற்றி கூறுகின்றனர். இவை அனைத்தையும் கோமதி பின்னால் இருந்து கேட்டு விடுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை எப்படியாவது வெண்பாவிடம் சொல்ல வேண்டும் என்று கால் செய்கிறார். அடுத்ததாக சௌந்தர்யாவிடம் இருக்கும் குழந்தை பசியில் அழுகிறது. பாலை கொடுத்தாலும் அழுகையை நிறுத்தவில்லை. இதோடு எபிசோடும் முடிவடைகிறது. இந்த ரகசியம் வெண்பாவிற்கு தெரியவந்தால் என்னென்ன நடக்குமோ?? என பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here