தமிழகத்தை தாக்கும் ‘நிவர் புயல்’ – கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’!!

0

சென்னை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று இன்னும் 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிவர் புயல்:

சென்னை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று நிவர் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிய நிலையில் கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்று சுழற்சி படிப்படியாக வடகிழக்கு பகுதியில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இவை மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு “நிவர்” புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. நிவர் புயல் தற்பொழுது சென்னையில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 740 கி.மீ மையத்தில் உள்ளது. இது நவம்பர் 25ம் தேதி சென்னைக்கும், காரைக்காலுக்கும் இடையில் உள்ள கடற்கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நவம்பர் 25ம் தேதி நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 55 கி.மீ வேகத்தில் புயல்காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தங்கள் படகு மற்றும் மீன்பிடிக்க தேவையான பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் துறை சார்த்த ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கரையை கடந்து செல்லும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையம் விடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக நவம்பர் 23ம் தேதி முதல் கடலோர பகுதியில் மணிக்கு 120 முதல் 130 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்றும் சில சமயங்களில் 140 கி. மீ வேகத்திலும் வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here