கண்ணம்மாவின் குழந்தையை தத்தெடுக்கும் சௌந்தர்யா – வெண்பாவை சந்திக்கும் பாரதி!! அனல்பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0
barathi kannama

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்ததை அடுத்து ஒரு குழந்தையை கண்ணம்மாவிற்கு தெரியாமல் வளர்க்க எடுத்துச் செல்கிறார் சௌந்தர்யா.

பாரதி கண்ணம்மா

சனிக்கிழமை எபிசோடில் கண்ணம்மாவிற்கு வெண்பாவின் சதி திட்டத்தையும் தாண்டி நல்லபடியாக குழந்தை பிறக்கிறது. கோவிலில் இருந்து ஹாஸ்பிடலுக்கு வரும் சௌந்தரய்யாவிற்கு குழந்தை பிறந்த விஷயம் தெரிய வர சந்தோசம் அடைகிறார். கண்ணம்மாவிற்கு மறுபடியும் பிரசவ வலி வரவே இன்னொரு குழந்தை பிறக்கிறது. மேலும் இரட்டை பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்க்கும் சௌந்தர்யாவிற்கு கண்ணம்மா தனியாளாக எப்படி குழந்தையை வளர்ப்பாள் என்று கவலையாக உள்ளது.

barathi kannama

இந்நிலையில் சௌந்தர்யா ஒரு முடிவை எடுக்கிறார். அதாவது இத்தனை நாள் வரை கண்ணம்மா கருப்பாக இருப்பதை பார்த்து அவளை வெறுத்து வந்தேன். அதற்கு பிராயச்சித்தமாக இந்த இரண்டு குழந்தையில் கருப்பாக இருக்கும் குழந்தையை கண்ணம்மாவிற்கு தெரியாமல் எடுத்து வளர்க்கலாம் என்று நினைக்கிறார். இதனை அகிலனிடம் கூறவே அவரும் அதிர்ச்சியடைகிறார்.

barathi kannama

இது சரிப்பட்டு வருமா?? என்று யோசிக்கிறார் அகிலன். ஆசிரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுப்பதாக கூறி வளர்ப்போம் என்று கூறுகிறார் சௌந்தர்யா. அகிலனுக்கும் இது சரியாக படவே இதற்கு சம்மதிக்கிறார். மேலும் அங்கிருக்கும் நர்ஸ் இடம் நடந்தவற்றை கூறி குழந்தையை தத்தெடுப்பதை பற்றி கேட்கிறார் சௌந்தர்யா. இதற்கு அந்த நர்ஸ் சம்மதிக்கிறார்.

barathi kannama

மேலும் இந்த விஷயம் வெண்பாவிற்கு எக்காரணத்தை கொண்டும் தெரிய கூடாது என்று கூறுகிறார். சௌந்தர்யா அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு செல்கிறார். மேலும் கண்ணம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறுகிறார். மற்றோரு பக்கம் கண்ணம்மாவை கொல்ல துடித்துக் கொண்டிருக்கும் வெண்பா லிப்ட் கேட்டு நின்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த பக்கமாக வரும் பாரதியை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

barathi kannama

மேலும் பாரதி, வெண்பாவிடம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?? என்று கேட்க வெண்பா முழித்துக் கொண்டிருக்கிறார். அங்கிருந்து எப்படி தப்பித்து செல்வது என்று யோசித்துக் கொண்டும் உள்ளார் வெண்பா. இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது. சௌந்தர்யாவின் எண்ணம் நிறைவேறுமா?? அல்லது பாரதிக்கு குழந்தையை பார்த்து கண்ணம்மா பற்றிய தவறான எண்ணம் அழியுமா?? என்பதை வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here